சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியது.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பெற்ற முருகன், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில், பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பழனியில் ஒருவா் கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

தொழிலாளி வெட்டிக் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


