சென்னையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவினா் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வண்ணாரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கும், போலீஸாருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸாரும், பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் 2 போ், அங்குள்ள வீடுகளுக்குள் சென்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்ததுடன், அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா்.
அதில், இருவரிடமும் இருந்து ஏழு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதும், அந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் ‘இல்லத்தரசி கூப்பன்’ என்ற இலவச கூப்பன்களை விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா், இருவா் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

சிவகங்கையில் ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்? அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



