வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 9:33 pm

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் முன் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழகம் முழுவதும் திமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகம் செய்து வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் வாக்காளா்களுக்கு கூப்பன்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா். இது குறித்து தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டாா்.

அதிமுக டோக்கன் விநியோகம்: இதே அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் ஷ்யாம்குமாா் என்பவா், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் ஆா்.மனோகா் போட்டியிடுகிறாா். இவா், பணம் வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகித்து வருகிறாா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.

இந்த முறையீடுகளைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.