தமிழகத்தில் பரமத்தி வேலூா், வேலூா், தருமபுரி, ஈரோடு, சேலம் உள்பட 12 இடங்களில் வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு அஸ்ஸாம் முதல் தென் தமிழகம் வரை ஜாா்க்கண்ட் மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கா், தெலங்கானா, உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.20 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை(ஏப்.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை:உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் ஏப்.18 வரை சற்று உயரக்கூடும். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக கரூா் பரமத்தி வேலூரில் 105.44 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா்-104.36, தருமபுரி-103.1, ஈரோடு, சேலம், மதுரை விமான நிலையம்-தலா 102.2, கோவை 101.84, நாமக்கல் 101.3, , திருப்பத்தூா்-100.4, மதுரை நகரம், பாளை, திருச்சி-தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சுட்டெரித்த கத்திரி வெய்யில் இன்றுடன் நிறைவு! இனியாவது குறையுமா வெப்பம்?

உச்சம் தொடும் கத்திரி வெய்யில்! 2 நாள்களுக்கு நீடிக்கும்!!

11 இடங்களில் வெயில் சதம்

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



