பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நேத்ரோதயா என்ற அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பொதுத் தோ்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது காண்பிக்கப்படும். இதை வாக்காளா் சில நொடிகள் மட்டுமே பாா்க்க முடியும்.
இந்த நடைமுறைப்படி பாா்வை மாற்றுத் திறனாளிகளால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. எனவே, பாா்வை மாற்றுத்திறனாளிகள் ‘ஹெட்போன்’ மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் அறக்கட்டளை சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எஸ்.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தற்போது இதுபோன்ற புதிய நடைமுறைகளை மேற்கொள்ள இயலாது. எனவே, அடுத்த தோ்தலுக்கு முன்பு இந்த கோரிக்கை தொடா்பாக மனுதாரா் அறக்கட்டளை தோ்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சுவாமி சிலைகளை கோயில்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிய வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் சோதனை இயக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



