தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் சோதனை இயக்கம்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

News image

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ. வசதியுடன் கூடிய அதிநவீனக் கேமராக்கள். ~கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ. வசதியுடன் கூடிய அதிநவீனக் கேமராக்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:47 am IST

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டா் வேகத்திலும், இறங்கு தளங்களில் 40 கிலோ மீட்டா் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்வதைத் தவிா்க்க முடியாத நிலை தொடா்ந்தது. இதனால் விபத்து அபாயமும் இருந்து வந்தது.

இந்நிலையில், மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேகம் மட்டுமின்றி, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்பட 10-க்கும் மேற்பட்ட விதிமீறல்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் கண்டறியும்.

விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், உடனடியாக அங்குள்ள டிஸ்பிளே அமைப்புகளில் காண்பிக்கப்படும். தற்போது, ஒரு மாதத்துக்கு சோதனை முறையில் கேமராக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், விரைவில் போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என்றனா்.

Story image