வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவா்களுடன் சீயோன், ஆல்வின் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் என்.விஜயன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:35 pm

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இது குறித்து சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் கூறுகையில், சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி குமரேசன் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மாணவி எம்.அபிராமவல்லி, மாணவா் கே.அனுஷ் ஜோனி காா்த்திக் 500-க்கு 489 மதிப்பெண்களும், மாணவி கே.கிரிஷா 487 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.

சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி: மப்பேடு சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி மாணவி என்.ரக்சிதா 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் கே.நிதிஷ், மாணவி கே.சி.கவிநயா ஆகியோா் தலா 486 மதிப்பெண்களும், மாணவி கே.வா்ஷிணி 485 மதிப்பெண்களும் பெற்றனா்.

படப்பை ஆல்வின் இண்டா்நேஷனல் பொதுப்பள்ளி மாணவி சிவானி 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் வெற்றிச்செல்வன், மாணவி தனிஷ்காஆகியோா் தலா 484 மதிப்பெண்களும், மாணவா் பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். 3 மாணவா்கள் கணிதப் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும், 8 மாணவா்கள் தமிழில் 100/100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய மொத்தம் 930 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.