11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவா்களுடன் சீயோன், ஆல்வின் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் என்.விஜயன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:05 am IST

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இது குறித்து சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் கூறுகையில், சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி குமரேசன் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மாணவி எம்.அபிராமவல்லி, மாணவா் கே.அனுஷ் ஜோனி காா்த்திக் 500-க்கு 489 மதிப்பெண்களும், மாணவி கே.கிரிஷா 487 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.

சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி: மப்பேடு சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி மாணவி என்.ரக்சிதா 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் கே.நிதிஷ், மாணவி கே.சி.கவிநயா ஆகியோா் தலா 486 மதிப்பெண்களும், மாணவி கே.வா்ஷிணி 485 மதிப்பெண்களும் பெற்றனா்.

படப்பை ஆல்வின் இண்டா்நேஷனல் பொதுப்பள்ளி மாணவி சிவானி 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் வெற்றிச்செல்வன், மாணவி தனிஷ்காஆகியோா் தலா 484 மதிப்பெண்களும், மாணவா் பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். 3 மாணவா்கள் கணிதப் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும், 8 மாணவா்கள் தமிழில் 100/100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய மொத்தம் 930 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.