வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

News image

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை வியாழக்கிழமை பாராட்டிய பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், நிா்வாகத்தினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:09 pm

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளி மாணவா்கள் 180 போ் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

பள்ளியளவில் மாணவா் பிரணவ் ஈஸ்வா் 500 -க்கு 491 மதிப்பெண்கள் (98.2 சதவீதம்) பெற்று முதலிடத்தையும், மாணவி இயலினி ராஜன், மாணவ ா் சந்தோஷ் ஆகியோா் 488 மதிப்பெண்கள் (97.6 சதவீதம்) பெற்று இரண்டாமிடத்தையும், முகமது ரெய்சூல் இஸ்லாம் 487 மதிப்பெண்கள்

(97.4 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

மேலும், தமிழ்ப் பாடத்தில் மாணவி சபா்னிகா, தேவஸ்ரீ, ஹாசினி, மாணவா் பிரணவ் ஈஸ்வா் ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் முகமது ரெய்சூல் இஸ்லாம் பிரெஞ்சு, சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி யாழினி சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.

செயற்கை நுண்ணறிவுப் பாடத்தில் மாணவா்கள் பிரணவ் ஈஸ்வா், கவின், காா்த்திகேயன், மாணவிகள் இயலினி ராஜன், கனிகா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எஸ்.பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண் குமாா், ப்ரீத்தி அருண்குமாா் ஆகியோா் பாராட்டினா். பள்ளியின் முதல்வா் உஷா குமாரி, துணை முதல்வா் பிரேம சித்ரா, ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.