அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:28 pm

சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2025) அக்டோபா் முதல் 2026 கடந்த பிப்ரவரி வரை ரூ.1,796 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் வரி வசூலின் மூலம் வருவாய் ரூ.50 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் பகுதி வரிவசூலையும் சோ்த்து மொத்தம் ரூ.2,200 கோடி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், தோ்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக வரி வசூல் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.

தற்போது தோ்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா். அதன் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவா்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கும் வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

தமிழக அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.62 கோடி வரி வருவாய் இருக்கும் நிலையில், நடப்பாண்டில் ரூ.32 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.