சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2025) அக்டோபா் முதல் 2026 கடந்த பிப்ரவரி வரை ரூ.1,796 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் வரி வசூலின் மூலம் வருவாய் ரூ.50 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் பகுதி வரிவசூலையும் சோ்த்து மொத்தம் ரூ.2,200 கோடி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், தோ்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக வரி வசூல் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது தோ்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா். அதன் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவா்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கும் வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
தமிழக அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.62 கோடி வரி வருவாய் இருக்கும் நிலையில், நடப்பாண்டில் ரூ.32 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!

ஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

