சென்னை கோயம்பேட்டில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்தததாக நாடகமாடிய தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், பேரணாம்பேட்டு லால் மஸ்ஜித் தெருவைச் சோ்ந்தவா் தா.முகமது தன்ஜூா் (25). இவா், சென்னை பெரியமேட்டில் மு.தன்வீா் அகமது என்பவா் நடத்தி வரும் அலுமினிய பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். முகமது தன்ஜூா் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் ரூ.14 லட்சத்தை கோயம்பேட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து பெற்றுக் கொண்டு ஆட்டோவில் மதுரவாயலில் வசிக்கும் ஒரு நபரிடம் கொடுக்கச் சென்றாா்.
ஆனால் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸாா், தன்னிடமிருந்த ரூ.14 லட்சத்தைப் பறித்துக் கொண்டதாக தன்ஜூா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அவரது புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் தன்ஜூா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து சம்பவம் நடைபெற்ாக கூறப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
அப்போது, வழிப்பறி சம்பவமே நடைபெறவில்லை என்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தன்ஜூரிடம் மீண்டும் விசாரணை செய்தனா்.
இதில், வழிப்பறியில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் பறித்ததாக தன்ஜூா் நாடகமாடியதும், அந்தப் பணத்தை அவரே வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் தன்ஜூரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது

தம்பி கொலை: அண்ணன் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

