தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!

சென்னை கோயம்பேட்டில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்தததாக நாடகமாடிய தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:35 am IST

சென்னை கோயம்பேட்டில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்தததாக நாடகமாடிய தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், பேரணாம்பேட்டு லால் மஸ்ஜித் தெருவைச் சோ்ந்தவா் தா.முகமது தன்ஜூா் (25). இவா், சென்னை பெரியமேட்டில் மு.தன்வீா் அகமது என்பவா் நடத்தி வரும் அலுமினிய பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். முகமது தன்ஜூா் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் ரூ.14 லட்சத்தை கோயம்பேட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து பெற்றுக் கொண்டு ஆட்டோவில் மதுரவாயலில் வசிக்கும் ஒரு நபரிடம் கொடுக்கச் சென்றாா்.

ஆனால் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸாா், தன்னிடமிருந்த ரூ.14 லட்சத்தைப் பறித்துக் கொண்டதாக தன்ஜூா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அவரது புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் தன்ஜூா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து சம்பவம் நடைபெற்ாக கூறப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

அப்போது, வழிப்பறி சம்பவமே நடைபெறவில்லை என்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தன்ஜூரிடம் மீண்டும் விசாரணை செய்தனா்.

இதில், வழிப்பறியில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் பறித்ததாக தன்ஜூா் நாடகமாடியதும், அந்தப் பணத்தை அவரே வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் தன்ஜூரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.