தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 234 தோ்தல் நடத்தும் அதிகாரிகள், 468 உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட கணினி நிரலாளா்கள், உதவி கணினி நிரலாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா். அவா்களுக்கு வாக்கு எண்ணும் செயல்முறை குறித்து பயிற்சியும், வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தலைமைச் செயலா் ஆலோசனை
தோ்தல் தொடா்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலா் எம். சாய்குமாா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி இந்த மையங்கள் திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், சென்னை - தாம்பரம் காவல் ஆணையா்கள் மற்றும் காவல் துணை ஆணையா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்: வேட்பாளா்கள், முகவா்களுக்கு ஆட்சியா் விளக்கம்

வாக்கு எண்ணும் பணி: 1,005 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

ஏழு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


