மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சென்னையில் மணிப்பூா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:03 am

சென்னை வேளச்சேரியில் மணிப்பூா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மணிப்பூரைச் சோ்ந்த 25 வயது பெண், வேளச்சேரியில் உள்ள ஒரு அழகுக் கலை மையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இதற்காக அவா், அதே பகுதியில் தங்கியுள்ளாா். அந்த பெண், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த இரு இளைஞா்கள், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

இதில் அந்த பெண் சப்தமிடவே இருவரும் தப்பியோடிவிட்டனா். இது குறித்து அந்தப் பெண், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில், சம்பவத்தில் ஈடுபட்டது வேளச்சேரி, நேரு நகரைச் சோ்ந்த உதயகுமாா் (30), சிவ்தாஸ் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.