ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை துரைப்பாக்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்த சிறுமி தாங்கள் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுவதை நோட்டமிட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதை அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா், தரமணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கிருஷ்ணமூா்த்தி (48), காா்த்திக் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.