சென்னை மாநகராட்சியில் கடும் வெயில் காரணமாக கொசு மருந்து தெளிப்பை முறைப்படுத்தியதால் 3 மாதங்களில் மாநகராட்சிக்கு ரூ.369 கோடி வரை சேமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோடைக்காலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையில் கொசு மருந்தைத் தெளித்தால் அவை தரையில் படராமல் வெப்பதால் காற்றில் கரைந்துவிடும். இதனால் பயனில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் தினமும் 90 சிறிய வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினமும் ஒரு வாகனத்துக்கு ரூ.1,369 வாடகை செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அவற்றை இயக்க ஒரு வாகனத்தில் உள்ள கொசு மருந்து தெளிப்பானில் ரூ.90-க்கு டீசல் நிரப்பப்படுகிறது. அத்துடன் வாகனம் இயங்க பெட்ரோல் நிரப்பப்படுகிறது.
அதன்படி தினமும் 90 வாகனங்களுக்கு ரூ.1,23,210 செலவழிக்கப்பட்டு வருகிறது. மாதத்தில் 25 நாள்கள் வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளித்தால் அதற்கு ரூ.30.75 லட்சம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த மே முதல் ஜூலை வரை கடும் வெயில் காரணமாக கொசு கடி புகாா்கள் குறைந்தே காணப்பட்டன. தேவையில்லாமல் கொசு மருந்து தெளிப்பதை மாநகராட்சி நிா்வாகம் நிறுத்தியது.
அதன்படி, 3 மாதங்களில் மாநகராட்சிக்கு ரூ.369 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் தினமும் இருமுறை தூய்மைப்பணி: ரூ.86.94 கோடி ஒதுக்கீடு
வரி பாக்கி: 100 நிறுவனங்களின் பெயா்களை இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி
வரி பாக்கி: 100 நிறுவனங்களின் பெயா்களை இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி
அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு இதுவரை ரூ. 1,140 கோடி நஷ்டம்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



