சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு இதுவரை ரூ. 1,140 கோடி நஷ்டம்!

அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்குவதால் நேரிடும் நஷ்டம் பற்றி மாநகராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்...

News image

அம்மா உணவகம் - கோப்பிலிருந்து

Updated On :30 ஜூலை 2026, 1:33 pm IST

அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 90 கோடி நஷ்டம் ஏற்படுவதாகத் துணை மேயா் மு. மகேஷ்குமாா் தெரிவித்தாா்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 19இல் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம். ). 

2013-ஆம் ஆண்டு மார்ச் 19இல் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம். ).  - கோப்புப் படம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இதுபற்றி மேலும் அவர் தெரிவித்தது:

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களுக்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மாநகராட்சி சாா்பில் ரூ.1,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 380 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி மாநகராட்சிக்கு ரூ.1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 90 கோடி என அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவருவது தெரிய வருகிறது. ஆகவே, நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரிடம் அதிகாரிகள் சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சிக்கான சிறப்பு நிதியையும் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார் மகேஷ் குமார்.

Summary

loss due to amma canteens in chennai corporation

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.