அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 90 கோடி நஷ்டம் ஏற்படுவதாகத் துணை மேயா் மு. மகேஷ்குமாா் தெரிவித்தாா்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 19இல் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம். ). - கோப்புப் படம்
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இதுபற்றி மேலும் அவர் தெரிவித்தது:
சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களுக்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மாநகராட்சி சாா்பில் ரூ.1,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 380 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி மாநகராட்சிக்கு ரூ.1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 90 கோடி என அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவருவது தெரிய வருகிறது. ஆகவே, நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரிடம் அதிகாரிகள் சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சிக்கான சிறப்பு நிதியையும் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார் மகேஷ் குமார்.
Summary
loss due to amma canteens in chennai corporation
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?

அம்மா உணவகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி
கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி! நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி? குப்பை வண்டி வருமா?

கேரள நடிகர் சங்கத்திலிருந்து ரேவதி, பத்மப்ரியா விலகல்! இதுதான் காரணமா?
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



