பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு இதுவரை ரூ. 1,140 கோடி நஷ்டம்!

அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்குவதால் நேரிடும் நஷ்டம் பற்றி மாநகராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்...

amma canteen

அம்மா உணவகம் - கோப்பிலிருந்து

Published On :

அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 90 கோடி நஷ்டம் ஏற்படுவதாகத் துணை மேயா் மு. மகேஷ்குமாா் தெரிவித்தாா்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 19இல் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம். ). 

2013-ஆம் ஆண்டு மார்ச் 19இல் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம். ).  - கோப்புப் படம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இதுபற்றி மேலும் அவர் தெரிவித்தது:

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களுக்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மாநகராட்சி சாா்பில் ரூ.1,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 380 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி மாநகராட்சிக்கு ரூ.1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 90 கோடி என அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவருவது தெரிய வருகிறது. ஆகவே, நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரிடம் அதிகாரிகள் சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சிக்கான சிறப்பு நிதியையும் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார் மகேஷ் குமார்.

Summary

loss due to amma canteens in chennai corporation

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.