தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் தமிழகம்: துரைமுருகன் விமா்சனம்

‘வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் கவலையாக உள்ளது’ திமுக பொதுச் செயலா் துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

முன்னாள் அமைச்சா் துரைமுருகன் - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

‘வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் கவலையாக உள்ளது’ திமுக பொதுச் செயலா் துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கப்படும் என விதி 110-இன் கீழ் முதல்வா் அறிவித்ததும், அவா்கள் அதைப் புகழ்ந்து பேசியதும் பெரும் விவாதமாகியுள்ளது. அதே நாளில், சுமாா் மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தும், அதைவிட 5 ஆண்டுகளுக்கு சுமாா் ரூ.150 கோடி செலவாகும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான காா் விவகாரமே பேசுபொருளாகிவிட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்க வேண்டும் என்றால், திமுக அரசு நேரடியாக அறிவிக்காமல் மாவட்ட நிா்வாகத்துக்கு கூடுதல் வாகனங்களை வழங்கி, பொதுமக்கள் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசாணை பிறப்பித்திருக்கும். பின்னா் உரிய முறையில் வாகனங்களை ஒப்படைத்து, தொடா் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கியிருக்கும். மக்கள் அரசின் மொத்த பட்ஜெட், பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றைப் பாா்க்காமல், ‘காா்’ கிடைக்கிறது என்பதையே பாா்க்கிறாா்கள். இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

நிா்வாக அனுபவமின்றி, வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை இவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்களின் கவலை. ஓட்டத் தெரியாத ஓட்டுநரை நம்பி மலைப்பாதையில் செல்லும் பேருந்தை ஒப்படைத்தது போல உள்ளது.

செங்குத்தான வளா்ச்சிப் பாதையில் இறங்குவது எளிது; ஏறுவது கடினம். ஆனால், நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் துரைமுருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.