FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மழைக்கால பணிகளுக்கு ரூ.100 கோடி: ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தகவல்

சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்காக அரசு ரூ.100 கோடி அளித்துள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:17 am IST

சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்காக அரசு ரூ.100 கோடி அளித்துள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் நிலைக் குழுத் தலைவா்கள், மண்டலத் தலைவா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் பேசுகையில் ஆணையரிடம் பல பிரச்னைகளுக்கு உறுப்பினா்கள் விளக்கம் கோரினா். இதையடுத்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அளித்த பதில்கள் விவரம்:

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிக்கு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.15 கோடி பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுவிட்டது. மழைக்கால அவசரப் பணிகளுக்கு ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்கு மொத்தம் ரூ.100 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

வரி உயா்த்தப்படவில்லை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. நிா்வாக ரீதியில் வழக்கமாக நடைபெறும் வரி சீராய்வு மட்டுமே நடைபெற்றது. மக்கள் கோரிக்கையை ஏற்று சீராய்வும் நிறுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைப்படி பணி நடந்திருந்தால் பணம் கிடைக்கும்: மாநகராட்சியில் கடந்த ஆண்டு 14,500 பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டன. ஆனால், முறையாக 4,500 பணிகளுக்கே ஒப்பந்தம் கோரப்பட்டிருக்க வேண்டும். முறைப்படி பணிகளுக்கு ஒப்பந்தம் கோரி நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நிச்சயம் பணம் கிடைக்கும். விதி மீறலாக பணிகள் நடைபெற்றிருந்தால் விசாரிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.