எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்

பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பற்றி...

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் - TN assembly

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:13 pm IST

எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கு திமுக மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பரந்தூருக்கு பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பேரவையில் இதுபற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி, "ஒசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக் கூடாது. பரந்தூர் போல ஒசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. அதேநேரத்தில் பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளர்ச்சி உருவாகும். திட்டங்கள் உருவாகும். அதனால் அங்கு எடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

No matter what project is introduced, agricultural land has to be acquired: Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.