தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு
நாட்டுக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு துறையின் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிந









