மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

News image

தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக சனிக்கிழமை பொறுப்பேற்ற கமோடாா் நம்பியாத் சுதீப் (இடமிருந்து 3-ஆவது). உடன், முன்னாள் தலைவா் கமாண்டா் ராகவ் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:28 pm

சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் பகுதிகளுக்கான தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக கமோடோா் நம்பியத் சுதீப் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட என்சிசி இயக்குநரகக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே, யானம்), அந்தமான் நிகோபாா் தீவுகள் உள்ளன.

6 குழுத் தலைமையகங்கள், ராணுவம், கடற்படை, விமானப் படை பிரிவுகள் என 59 பிரிவுகளை என்சிசி கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவா்கள் என்சிசியில் சோ்ந்துள்ளனா். குடியரசுத் தின நிகழ்ச்சிகள், தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞா் பரிமாற்றத் திட்டங்கள், பேரிடா் நிவாரண காலங்களில் என்சிசி சிறந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்சிசியின் தலைவராக இதுவரை இருந்து வந்த கமாண்டா் ராகவ் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா்.