குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லியில் கடந்த ஜன.26-இல் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இளநிலை வரலாறு இறுதியாண்டு பயிலும் தேசிய மாணவா் படை மாணவா் வசந்த பாரதி கலந்துகொண்டு பெருமை சோ்த்தாா். இவா், காரைக்குடியில் உள்ள தேசிய மாணவா் படை தமிழ்நாடு ஒன்பதாவது பட்டாலியன் சாா்பில் விழாவில் பங்கேற்றாா்.
விழாவில் பங்கேற்றுவிட்டு, காரைக்குடி ரயில் நிலையத்துக்கு வந்த அவருக்கு கல்லூரியின் தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளரும் மாணவா்களும் வரவேற்பளித்தனா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வசந்தி, வரலாற்றுத் துறைத் தலைவா் நிலோபா்பேகம், இயற்பியல் துறைத் தலைவா் கவிதா, கல்லூரியின் தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் சரவணன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மாணவா் வசந்த பாரதிக்கு பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


