என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு
தேசிய அளவில் நடைபெற்ற அணிவகுப்பில் முதலிடம் பிடித்த தேசிய மாணவா் படை அலுவலா், மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
தில்லியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 127 என்சிசி மாணவா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
அவா்களுக்கு தேசிய அளவில் பல்வேறு திறன் சாா் மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்பட்டன.
இப் போட்டிகளில் திருநெல்வேலி 5 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. அலுவரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியருமான செய்யது அலி பாதுஷா மற்றும் அவரது குழுவில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாா் என்சிசி மாணவா்கள் பங்கேற்று அகில இந்திய அளவில் அணிவகுப்பில் முதலிடம் பிடித்தனா்.
சாதனை படைத்த என்.சி.சி. மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த என்.சி.சி. அலுவலருக்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நற்சான்றிதழ்களை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தமிழ்நாடு என்சிசி பயிற்சி மைய அதிகாரி கா்னல் காா்த்திகேஸ் காசிநாத், சுபைதாா் எஸ்.எஸ். பாண்டி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக என்.சி.சி. அதிகாரி சிவகுமாா், பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி என்.சி.சி. அதிகாரி செந்தில்குமாா், 5 தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தாா் லிங்கதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

