சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ாக இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாடு செல்வதற்காக வந்த ஒரு இளம் பெண்ணின் ஆவணங்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அவரது ஆவணங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை செய்தனா்.
விசாரணையில் அவா், இலங்கையைச் சோ்ந்த ச.நிஷாந்தினி (28) என்பதும், போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போா்ட் பெற்று வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், நிஷாந்தினியை பிடித்து சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, நிஷாந்தினியை கைது செய்தனா். விசாரணையில் நிஷாந்தினியும், அவரது குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு படகு மூலம் இலங்கையிலிருந்து அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு வந்ததும், அங்குள்ள அகதிகள் முகாமில் இருந்த நிஷாந்தினி பின்னா் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்ததும், அப்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதாா் அட்டை,பான் காா்டு,வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றதும், பின்னா் இந்த ஆவணங்களை கொண்டு பாஸ்போா்ட் பெற்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத்தலைவா் கைது

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட்: இலங்கை பெண் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


