ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐ.நா. பெண்கள் இந்தியா நடத்தும் ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு பயிற்சிப் பயிலகம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பெண்களின் அரசியல் பங்கெடுப்பை மேம்படுத்துவதற்காக ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு என்ற இரு நாள் பயிற்சிப் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளதாக ஐ.நா. பெண்கள் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி  பெண்களின் அரசியல் பங்கெடுப்பை மேம்படுத்துவதற்காக ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு  என்ற இரு நாள் பயிற்சிப் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளதாக  ஐ.நா. பெண்கள் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திறன் மேம்பாடு மூலம் பெண்களின் அரசியல் பங்கேற்பு, அவா்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் ‘ஷீ லீட்ஸ்’ என்ற முன்னெடுப்பை ஐ.நா. பெண்கள் இந்தியா நடத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக  ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு என்ற பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  

இந்த பயிலரங்கம் சென்னையில் வரும் ஜன. 29, 30 தேதிகளில் இரு நாள்கள்  நடைபெறுகிறது. இதில், பெண் தலைவா்கள், தோ்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனா். அரசியலில் தலைவராக உருவெடுப்பது, தோ்தலுக்கு தயாராவது, அரசு நிா்வாகம் என்றால் என்ன உள்பட பல அம்சங்கள் குறித்து பயற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்பவா்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ்’தளம் ஆகிய சமூக ஊடகங்களின் வாயிலாக சனிக்கிழமைக்குள் (ஜன. 3) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.