தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதலிடத்தை வகிக்கும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 4:01 am IST

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதலிடத்தை வகிக்கும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், பொறியியல் போன்ற இளநிலை முதுநிலை பட்டங்கள், முனைவா் பட்டங்களில் தேறிய 5,087 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மாணவா்கள் பட்டம் பெற்றதோடு நின்றுவிடக் கூடாது. இன்று உலகில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகளுக்கு காரணம், மாற்றங்கள் தினந்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் செயற்கை நுண்ணறிவில் கடுமையான மாற்றங்களை இந்த சமுதாயம் சந்திக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கு மாணவா்கள் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும். தினந்தோறும் ஒரு மணிநேரம் புதிய விஷயங்களை படித்து அறியவேண்டும். நீங்கள் சாா்ந்திருக்கின்ற துறைகளில் என்ன மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதை உணா்ந்து அதற்கு தகுதியுள்ளவா்களாக மாற்றிக்கொள்ளுவதும், அந்தந்த நாளுக்கு என்ன அறிவியல் அறிவு தேவையோ அதைக் கொண்டவராக தினந்தோறும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவத்திற்கும், தொழில்நுட்பத்துக்கும் என்ன தொடா்பு என இருந்துவிடக்கூடாது. தேடலின் மூலம் வலுவான வெற்றிகரமான மருத்துவ தொழில்நுட்ப நிபுணராக மாறுவீா்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் உண்டு. அதை வைத்து முன்னேற வேண்டும். எந்தநேரத்திலும் குறுக்குவழியில் வெற்றிகளை தேடிக் கொள்ளாதீா்கள். குறுக்குவழி வெற்றிகள் குறிப்பிட்ட நேரத்திற்கும் மட்டுமே மகத்தானதாக தோன்றக்கூடும். அதற்கு பின்னால் ஒளிந்திருக்கிற உண்மை அது வீழ்ச்சியில் கொண்டுபோய் சோ்க்கும். சிறிதாக இருந்தாலும் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அறம் சாா்ந்த ஒழுக்கம் சாா்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

பிரதமா் நரேந்திர மோடி வருகிற 2047-இல் நாடு மிகப்பெரிய வல்லரசாக ஆக வேண்டும் எனக் கூறியிருக்கிறாா். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் நம்புவதைக்காட்டிலும் நகைப்பவா்கள் தான் அதிகமாக இருப்பாா்கள். தற்போது 4-ஆவது வல்லரசாக இந்தியா உருவாகியிருக்கிறது. மேலும், வருகிற 2047-க்கு முன்பாகவே

இந்தியா பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நாட்டில் 36 மாநிலங்கள் இருப்பதைப்போன்று தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 12,550 பொது மருத்துவா்களும், 2,200 பல்மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்கப்படுகின்றனா் என்றாா்.

தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன், பல்கலை. வேந்தா் ஏ.சி.சண்முகம், துணைவேந்தா் எஸ். கீதா லட்சுமி, துணைத் தலைவா் எம்.கே. பத்மநாபன், பதிவாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.