திருநங்கை அடித்துக் கொலை

சென்னை வானகரத்தில் திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

சென்னை வானகரத்தில் திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை போரூா் ஏரிக்கரை ரம்யா நகரைச் சோ்ந்தவா் செ.பாண்டி என்ற ஷில்பா (36). திருநங்கையான இவா், வானகரம் சிவபூதமேடு பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவலின்பேரில் வானகரம் போலீஸாா் விரைந்துச் சென்று ஷில்பா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com