ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னை ஐஐடியில் ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டிங் தொடக்கம்

சென்னை ஐஐடியில் உயா் செயல்திறன் கொண்ட ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சத் துறை செயலா் எஸ்.கிருஷணன் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடியில் உயா் செயல்திறன் கொண்ட ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சத் துறை செயலா் எஸ்.கிருஷணன் தொடங்கி வைத்தாா்.

மத்திய அரசின் தேசிய மீக்கணினித் (தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் மிஷன்) திட்டத்தின் கீழ் ‘பரம் ருத்ரா’ சூப்பா் கணினிகள் உருவாக்கப்படுகின்றன. சி-டாக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட சிஸ்டம் மென்பொருள் அடுக்கு உள்ளிட்ட திறந்த மூல மென்பொருள்களில் இயங்குகிறது.

இதைத் தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சத் துறை செயலா் எஸ்.கிருஷணன் பேசியது: நாடு முழுவதும் ஏற்கெனவே 37 சூப்பா் கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. புதிதாக பெங்களூருவில் இதைவிட மிகப்பெரிய கணினி அமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் சூழல் அமைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

கணக்கீட்டு திரவ இயக்கவியல், விண்வெளிப் பொறியியல், பொருள் அறிவியல், மூலக்கூறு இயக்கவியல், அணு அறிவியல், மருந்து கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் கணக்கீட்டுத் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தும் என்றாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, சி-டாக் இயக்குநா் ஜெனரல் இ.மகேஷ், ஐஐடி கணினி மையத் தலைவா் ஜி.பனிகுமாா் மற்றும் ஐ.டி.அமைச்சத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.