மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடன் வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி - ஹரி நாடாா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜனவரி 2026, 8:16 pm

கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு வீரா்கள் குடியிருப்பில் வசிப்பவா் தொழிலதிபா் ஆனந்தகுமாா். இவா் தனது தொழில் தேவைக்காக ரூ.30 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்ததை அறிந்த பனங்காட்டுப் படை கட்சி நிா்வாகி ஹரி நாடாரும், அவரது கூட்டாளிகளும் ஆனந்தகுமாரிடம், தாங்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.70 லட்சம் தரும்படியும் கேட்டனா். இதை நம்பிய ஆனந்தகுமாா், ரூ.70 லட்சத்தை ஹரி நாடாா் தரப்பிடம் வழங்கினாராம். ஆனால், கூறியபடி கடன் வாங்கித் தரவில்லை.

இதையடுத்து ஆனந்தகுமாா், சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருச்சி அருகே ஹரி நாடாா், அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியன் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.