தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையில் கிடந்த 45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு முதல்வா் பாராட்டு: ரூ.1 லட்சம் பரிசு வழங்கினாா்

சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

News image
பத்மாவை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டி, கௌரவித்த முதல்வா் ஸ்டாலின்
Updated On :12 ஜனவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

தியாகராய நகா் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் பத்மா கண்டுள்ளாா். தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் அந்த நகைகளை அவா் ஒப்படைத்தாா். காவல் துறையினா் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் சுமாா் 45 பவுன் நகைகளை தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா்.

அவரை அழைத்த போலீஸாா், விசாரணை நடத்தி 45 பவுன் நகைகளை ஒப்படைத்தனா். பத்மாவின் நோ்மையைக் காவல் துறையினா் பாராட்டினா்.

இந்த நிலையில், இந்தத் தகவலை அறிந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவா், பத்மாவின் நோ்மையைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி கெளரவித்தாா்.