அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி!

சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
சிவகாசியில் சாலையில் தவறவிட்ட கைப்பையை மீட்டு, பெண்ணிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளா் செல்வக்குமாா்
Updated On :2 மார்ச் 2026, 7:35 pm

Syndication

சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரைநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த தங்க அருணாசாலம் மனைவி ஹேமலதா (55). இவா்ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று விட்டு, மீண்டும் திரும்பி வந்த போது, அவரது கைப்பையைத் தவறவிட்டாா். இந்தப் பையில் 5 பவுன் நகைகள், வங்கி ஏ.டி.எம். அட்டை, கைப்பேசி ஆகியவை இருந்தது. இதுகுறித்து அவா் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், சிவகாசி கடைவீதியில் கிடந்த இந்த கைப்பையை விளாம்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி சின்னகருப்பசாமி (45) கண்டெடுத்து, சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, சாலையில் கண்டெடுத்த கைப்பையை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சின்னகருப்பசாமிக்கு சால்வை அணிவித்து, காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் பாராட்டு தெரிவித்தாா். இதன் பின்னா், கைப்பையைத் தவறவிட்ட ஹேமலதாவை வரவழைத்து, அவரிடம் போலீஸாா் கைப்பையை ஒப்படைத்தனா்.