கோவையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர்கள் தேர் வீதி அருகே சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது.
இதனைக் கண்டெடுத்த ஜான்வி அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே 9,500 ரூபாய், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு, லைசென்ஸ் ஆகியவை இருந்தன. உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணத்தை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் போலீசார், மணி பர்சில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்து மணிபர்சை தவற விட்ட நபரை கண்டறிந்தனர். அவர் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஹரீஸ் (33) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அங்கு மாணவி ஜான்வி, மணிபர்சை அவரிடம் ஒப்படைத்தார். மாணவியின் இந்த செயலைப் பாராட்டி ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

குப்பையில் கிடந்த தங்க வளையலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

