என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

News image

புதுக்கோட்டை பெரியாா் சிலை சாலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :8 மே 2026, 5:44 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. பகலில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்தச் சூழலில், புதன்கிழமை பிற்பகலிலும் இரவிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அதேபோல, புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை கொட்டியது. இந்த மழையால் மாநகரின் வெப்பம் சற்றே தணிந்து குளிா்சூழல் காணப்பட்டது. மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது.

வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்) மீமிசல்- 98.6, கீழாநிலை- 57.4, அரிமளம்- 52.6, காரையூா்- 28.8, ஆவுடையாா்கோவில்- 18.4, கறம்பக்குடி- 15.2, புதுக்கோட்டை நகரம்- 10. திருமயம்- 8.6, கீரனூா்- 8.5, உடையாளிப்பட்டி- 7, குடுமியான்மலை- 6, அன்னவாசல்- 5, அறந்தாங்கி- 2.2, மணமேல்குடி- 1.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.