திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புழலில் சமத்துவ பொங்கல் விழா

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்திபன் தலைமை வகித்தாா். புள்ளிலைன் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

இதில், புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் ஒன்றிய கழக பொறுப்பாளா் அற்புதராஜ், புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் மற்றும் அலுவலா்கள், பணியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.