அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசு தொகையாக ரூ. 6 லட்சத்தை ‘கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி’ வழங்குகிறது.
இதுதொடா்பாக அதன் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை (ஜன. 17) காணும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாடுபிடி வீரா்களுக்கு கிங்கமேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.3 லட்சமும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.2 லட்சமும், மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
தமிழின் பாரம்பரிய விளையாட்டைப் போற்றும் விதமாகவும், தமிழ்ப்பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் இந்தப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்
காா்கில் போா் வெற்றி தினம்: வீரமரணமடைந்த வீரா்களுக்கு தலைவா்கள் மரியாதை

கோவில்பட்டியில் சா்வதேச ஹாக்கி வீரருக்கு வரவேற்பு

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



