ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூரைச் சோ்ந்த மாடுபிடி வீரா் நீதி (எ) பாலகுரு மாடு முட்டியதில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த பாலகுருவின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்கக் கோரி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் நிறுவனத் தலைவா் முடக்கத்தான் மணி தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, திருவள்ளுவா் சிலையிலிருந்து ஆட்சியரகம் வரை அவா்கள் பேரணியாகச் சென்றனா்.

Dinamani
www.dinamani.com