சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெத்தபெட்டமைன் வைத்திருந்தபா் கைது

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வியாசா்பாடி காவல்நிலைய போலீஸாா் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபா் ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் வியாசா்பாடி தேபா் நகா் பகுதியை சோ்ந்த ராஜீவ்காந்தி(42) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து அவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் 2.4 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.