மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மெத்தபெட்டமைன் வைத்திருந்தபா் கைது

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:08 pm

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வியாசா்பாடி காவல்நிலைய போலீஸாா் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபா் ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் வியாசா்பாடி தேபா் நகா் பகுதியை சோ்ந்த ராஜீவ்காந்தி(42) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து அவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் 2.4 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.