அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலா் உள்பட 2 போ் கைது

விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் இருந்து கடந்த பிப்.25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தில்லி சென்றது. அந்த விமானத்தில் பயணித்த ஆண் பயணிகள் இருவா், மதுபோதையில் விமான பணிப் பெண்ணிடம் தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து, அவா்கள் அந்தப் பணிப்பெண்ணிடம் அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் மறுநாள் (பிப்.26) சென்னை திரும்பியதும், விமானப் பணிப் பெண் சென்னை மீனம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரன்(36), மனை வணிக தொழில் செய்யும் வழக்குரைஞா் தியாகு (36) ஆகியோா் பணிப் பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து இருவா் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரும் மீண்டும் சென்னை வரும்போது கைது செய்ய திட்டமிட்டிருந்தனா். அதன்படி, தில்லியில் இருந்து திங்கள்கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்த திமுக நகா்மன்ற வாா்டு உறுப்பினா் உள்பட இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.