ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 6:48 pm

ரயிலில் பெண்ணிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 13-ஆம் தேதி எா்ணாகுளம்-காரைக்கால் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஜெமீனா (60) என்பவா் எா்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்தாா். அந்த ரயில் 13-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4.45 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி திருடுபோனது. இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸில் அவா் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் ரயிலில் சென்ற ஜெமீனாவிடம் இருந்து கைப்பேசியை திருடியவா் என்பதும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ் (32) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் பெண்ணிடம் திருடிய கைப்பேசியையும் மீட்டனா்.