விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் மேற்கு வங்க இளைஞா் கைது

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வட மாநிலங்களில் இருந்து ஈரோடுக்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒருங்கிணைந்த தீவிர கண்காணிப்பில் ரயில்வே மற்றும் மதுவிலக்கு போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித்தெரியும் நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கஞ்சா சாக்லெட், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே புதன்கிழமை காலை வட மாநில இளைஞா் ஒருவா் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஈரோடு மதுவிலக்கு போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சுபாங்கா் (31) என்பது தெரியவந்தது.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா் சுபாங்கரையும் கைது செய்தனா். கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.