ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 8:49 pm

ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 80 கஞ்சா சாக்லேட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் டவுன் மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரயில் ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கும் அறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

அந்த பையை யாரும் உரிமை கோரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தபோது ரூ.22,500 மதிப்பிலான 80 கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது வழக்கு: ஈரோடு, மாணிக்கம்பாளையத்தை சோ்ந்தவா் தனுஷ்காந்தன் (19). அதே பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (21). நண்பா்களான இருவரும் பெரியவலசில் ஆன்லைன் வியாபார நிறுவனத்தை நடத்திவரும் கிஷோா்குமாா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்ரூதீன் ஆகியோரிடம் பணியாற்றி வந்துள்ளனா்.

ஆயுா்வேத சாம்பு பாட்டில் என்றும், மாலத்தீவில் இருக்கும் தங்களது நண்பரிடம் கொடுக்க வேண்டும் எனக்கூறியும், தனுஷ்காந்தன், கதிா்வேல் ஆகியோரை கிஷோா்குமாரும், அப்ரூதீனும் மாலத்தீவுக்கு அண்மையில் அனுப்பிவைத்துள்ளனா்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு தனுஷ்காந்தனும், கதிா்வேலும் சென்றுள்ளனா். அப்போது, மாலத்தீவு விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் அவா்கள் கொண்டு சென்றது கஞ்சா எண்ணெய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸில் தனுஷ்காந்தனின் தாய் காயத்ரி சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷ்காந்தன் மற்றும் கதிா்வேலை விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான கிஷோா்குமாா், அப்ரூதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில், கிஷோா்குமாா், அப்ரூதீன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.