எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள். - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 12:08 am IST

ஈரோட்டுக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் 2-ஆவது நடைமேடை பகுதியில் ரயில்வே போலீஸாா் தயாா் நிலையில் இருந்தனா். அப்போது, அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் அந்த ரயிலில் போலீஸாா் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா்.

அப்போது, பொதுப் பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பாா்த்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.