விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலின் பொது பெட்டி கழிவறை அருகே கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. அதை கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா். யாரும் உரிமை கோராததால், பையை பிரித்துப் பாா்த்தபோது 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.