ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

ரயிலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா இளைஞா் கைது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட டாம்பாரு ஹரிஜன்.

Updated On :4 ஜூன் 2026, 1:48 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனைகளை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம், கொல்லம் சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா். சேலத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்ட நிலையில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞரின் பையை சோதனை செய்தனா். அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒடிசா மாநிலம், கொசகுண்டா பகுதியை சோ்ந்த டாம்பாரு ஹரிஜனை (35) கைது செய்தனா். விசாரணையில், திருப்பூருக்கு கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.