லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

News image

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் ரயில்வே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:35 pm

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாம் ஆலன் தலைமையிலான போலீஸாா், திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த புருளியா - திருநெல்வேலி விரைவு ரயிலில் (22605) சோதனையிட்டனா்.

அப்போது வண்டியின் பொதுப்பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை (ஷோல்டா் பேக்) அவா்கள் சோதனையிட்டபோது, அதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 16.645 கிலோ எடையுள்ள (தலா 2 கிலோவில் 8 பாக்கெட்டுகள்) கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கஞ்சாவை எடுத்து வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.