ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:44 pm

எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை காலை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையிலான

போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குளிா்சாதன வசதியுள்ள பெட்டியில் இரு பைகளில் 31 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் எனவும், மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.