எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை காலை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையிலான
போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குளிா்சாதன வசதியுள்ள பெட்டியில் இரு பைகளில் 31 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் எனவும், மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
தொடர்புடையது
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


