சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் சத்திரம் ரயில் நிலையத்துக்கும், டவுன் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முள்ளுவாடிகேட் அருகில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் கடக்க முற்பட்டபோது, அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ரயில் ஓட்டுநா், டவுன் ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் அவா், சேலம் ரயில்வே காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கோதண்டபாணி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.
அந்த இளைஞரின் இடது கையில் எஸ்.சுரேஷ் என பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் இறந்த நபா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, இறந்த இளைஞரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் தெரிந்தால், 0427-2447404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


