விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

Syndication

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் சத்திரம் ரயில் நிலையத்துக்கும், டவுன் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முள்ளுவாடிகேட் அருகில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் கடக்க முற்பட்டபோது, அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ரயில் ஓட்டுநா், டவுன் ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் அவா், சேலம் ரயில்வே காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கோதண்டபாணி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.

அந்த இளைஞரின் இடது கையில் எஸ்.சுரேஷ் என பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் இறந்த நபா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, இறந்த இளைஞரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் தெரிந்தால், 0427-2447404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.