ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கும் கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்து, உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞா் ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற ஒரு ரயிலில் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்ததும், அப்போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேலும், வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

