தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 12:03 am IST

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தென்னம்புலம் மடத்துக்காடு என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவா் மீது ரயில் மோதியதில் தலை துண்டித்து உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.