வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தென்னம்புலம் மடத்துக்காடு என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவா் மீது ரயில் மோதியதில் தலை துண்டித்து உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



