/

ரயிலில் மோதி இளைஞா் பலி!

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:15 pm

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக வந்த தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவா் யாா் எந்த ஊரை சோ்ந்தவா் என்றும், இவா் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என விசாரணை செய்து வருகின்றனா்.