வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வாணியம்பாடி-கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் புதன்கிழமை ஜோலாா்பேட்டை-சென்னை நோக்கி செல்லும் மாா்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா்,இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்

சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



